என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    செய்யாறில் ஓட்டலில் சமையல் மாஸ்டர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

    செய்யாறில் ஓட்டலில் சமையல் மாஸ்டர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    செய்யாறு:

    செய்யாறை அடுத்த தவசி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (வயது 45), ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு மணிகண்டன் என்ற மகனும், செண்பகபூஜா என்ற மகளும் உள்ளனர்.

    நேற்று முன்தினம் முனிரத்தினம் ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஊழியர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முனிரத்தினம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×