என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கோப்புபடம்
காற்றுக்காக கதவை திறந்து வைத்து வீட்டில் தூங்கிய பெண்ணிடம் தங்கச்சங்கிலி பறிப்பு
By
மாலை மலர்20 Sep 2021 11:11 AM GMT (Updated: 20 Sep 2021 11:11 AM GMT)

மங்களமேடு அருகே காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துச்சென்றார்.
மங்களமேடு:
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பழனியம்மாள்(வயது 45). இவர்கள் நேற்று முன்தினம் இரவு காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினர். நேற்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, பழனியம்மாளின் கழுத்தில் கிடந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த பழனியம்மாள், மர்ம நபர் சங்கிலியுடன் ஓடுவதை கண்டு திருடன்..., திருடன்... என்று சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
