என் மலர்
செய்திகள்

தொழிலாளி பலி
தேன்கனிக்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
தேன்கனிக்கோட்டை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 28). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அந்தேவனப்பள்ளியில் புதிய வீடு கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக 2-வது மாடியில் இருந்து ஸ்ரீநாத் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஸ்ரீநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






