என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி அருகே போலி பெண் டாக்டர் மீது வழக்கு
Byமாலை மலர்18 Sep 2021 1:20 PM GMT (Updated: 18 Sep 2021 1:20 PM GMT)
தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் குழுவினர் மேலதட்டப்பாறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே மருத்துவ படிப்பு படிக்காமல் சிலர் அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் முருகவேல் தலைமையிலான மருத்துவ அதிகாரிகள் குழுவினர் மேலதட்டப்பாறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு அந்த பகுதியை சேர்ந்த சந்திரா (வயது 51) என்பவர் எந்த வித மருத்துவ படிப்பும் படிக்காமல், வீட்டில் ஆஸ்பத்திரி போன்று வைத்து பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்தாராம். அவர் அலோபதி மாத்திரைகளையும் வழங்கி உள்ளார்.
இதைத் தொடர்ந்து இணை இயக்குனர் முருகவேல் தட்டப்பாறை போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் தட்டப்பாறை போலீசார், சந்திரா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X