என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுமலையில் பெண் யானை உயிரிழப்பு- வனத்துறையினர் விசாரணை
Byமாலை மலர்17 Sep 2021 8:16 AM GMT (Updated: 17 Sep 2021 8:16 AM GMT)
முதுமலையில் பெண் யானை உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சீகூர் வனத்தில் 20 வயதான பெண் காட்டு யானை இறந்து கிடந்தது இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் குடலில் ஒட்டுண்ணி புழுக்களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் வனச்சரகர் விஜயன் தலைமையிலான வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது உடல் அழுகிய நிலையில் பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது உடல் மிகவும் அழுகியதால் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் பிற வனவிலங்குகள் கடித்த காயங்கள் காட்டு யானையின் உடலில் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு காட்டு யானைகள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதனால் யானையின் உடற்பாகங்களை மாதிரி பரிசோதனைக்காக சேகரித்தனர். இதன் அறிக்கை வந்த பின்னரே காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காட்டு யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த 2 தினங்களுக்கு முன்பு சீகூர் வனத்தில் 20 வயதான பெண் காட்டு யானை இறந்து கிடந்தது இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் குடலில் ஒட்டுண்ணி புழுக்களின் தாக்குதல் இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனப்பகுதியில் வனச்சரகர் விஜயன் தலைமையிலான வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது உடல் அழுகிய நிலையில் பெண் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது உடல் மிகவும் அழுகியதால் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மேலும் பிற வனவிலங்குகள் கடித்த காயங்கள் காட்டு யானையின் உடலில் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர். ஏதேனும் நோய்த்தொற்று ஏற்பட்டு காட்டு யானைகள் சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு இறந்திருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதனால் யானையின் உடற்பாகங்களை மாதிரி பரிசோதனைக்காக சேகரித்தனர். இதன் அறிக்கை வந்த பின்னரே காட்டு யானையின் இறப்புக்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து காட்டு யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X