search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலி - புதிதாக 18 பேருக்கு தொற்று

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினார். புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் 15 பேர் குணமடைந்தனர்.

    இதனால் `டிஸ்சார்ஜ்' ஆனவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 816 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 398 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 199 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×