search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருப்பூர் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை

    கோபிசெட்டிபாளையம் அருகே திருப்பூர் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி தங்கமணி (36). இவர்களுக்கு பிரபாகரன் (22) என்ற மகனும், செல்வி (14) என்ற மகளும் உள்ளனர்.

    தங்கமணி வேலம்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் அஸ்வின் (21) என்பவரது கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. தனது மகன் வயதுள்ள அஸ்வினுடன் கள்ளக்காதல் ஏற்பட்டதால் தங்கமணியை குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். இதேபோல் அஸ்வினையும் அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இதனால் மனம் உடைந்த கள்ளக்காதல் ஜோடி நேற்று வீட்டை விட்டு வெளியேறி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி என்ற பகுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஒரு கிணற்று ஓரம் அமர்ந்து வி‌ஷம் குடித்தனர். பின்னர் அவர்கள் கிணற்றில் குதித்தும் தற்கொலை செய்து கொண்டனர்.

    இன்று காலை 2 பேரின் உடல்களும் கிணற்றில் கிடக்கும் தகவல் தெரிய வந்ததும் கோபி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரு வீட்டாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் திருப்பூரில் இருந்து கோபிசெட்டிபாளையம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த பின்புதான் முழு விபரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.


    Next Story
    ×