என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை
Byமாலை மலர்13 Sep 2021 7:09 AM GMT (Updated: 13 Sep 2021 7:09 AM GMT)
நெல்லை அருகே திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே புது மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது மனைவி பிரிந்து தாய் வீடு சென்று விட்டார்.
இதனால் முத்துக்குட்டி கவலையுடன் காணப்பட்டார். முத்துக்குட்டியின் உறவினர்கள் பெண் வீட்டாரிடம் சமரசம் பேசி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குட்டி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலமாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 27), கூலித்தொழிலாளி. இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணமான சில நாட்களிலேயே புது மனைவிக்கும், முத்துக்குட்டிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அவரது மனைவி பிரிந்து தாய் வீடு சென்று விட்டார்.
இதனால் முத்துக்குட்டி கவலையுடன் காணப்பட்டார். முத்துக்குட்டியின் உறவினர்கள் பெண் வீட்டாரிடம் சமரசம் பேசி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முத்துக்குட்டி விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X