என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளத்தில் மூழ்கி குழந்தைகள் பலியானதால் தந்தை தற்கொலை
Byமாலை மலர்11 Sep 2021 7:01 AM GMT (Updated: 11 Sep 2021 7:01 AM GMT)
குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்பூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் ஜஸ்வந்த் (வயது 8). மகள் ஹரிபிரிதா (6). கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையில் இருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று காலை லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாச கிரிமலைக்கு சென்றார். அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அந்த நேரத்தில் அவருடன் சென்றிருந்த ஜஸ்வந்த், ஹரிப்ரியா இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
உமாராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் ஆஸ்பத்திரியில் இருந்த லோகேஸ்வரன் திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன். சென்னையில் உள்ள ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களது மகன் ஜஸ்வந்த் (வயது 8). மகள் ஹரிபிரிதா (6). கள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். மீனாட்சியின் தாய்வீடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கடாம்பூர் கிராமத்தில் உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு மீனாட்சி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஊத்தங்கரையில் இருந்து குடும்பத்தோடு கடாம்பூர் கிராமத்திற்கு வந்தார்.
நேற்று காலை லோகேஸ்வரன் தனது 2 குழந்தைகளுடன் கைலாச கிரிமலைக்கு சென்றார். அங்குள்ள சுப்பிரமணியசாமி கோவில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றார். அந்த நேரத்தில் அவருடன் சென்றிருந்த ஜஸ்வந்த், ஹரிப்ரியா இருவரும் தவறி குளத்தில் விழுந்தனர்.
நீச்சல் தெரியாததால் குளத்தில் இருவரும் தத்தளித்தனர். அவர்களை லோகேஸ்வரன் காப்பாற்ற முயன்றார். ஆனால் முடியவில்லை. குழந்தைகள் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
உமாராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று காலையில் ஆஸ்பத்திரியில் இருந்த லோகேஸ்வரன் திடீரென பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். குழந்தைகள் இறந்த துக்கம் தாங்காமல் தந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X