search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கர்நாடகாவில் சந்தன மரம் கடத்தல்: தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்கள் கைது

    சந்தன மரம் கடத்தல் வழக்கில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்களை கர்நாடக மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேப்பனப்பள்ளி:

    கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் குப்பி தாலுகாவில் கம்பள புரா ஹரகலதேவி வனப்பகுதியில் மிகப்பெரிய சந்தனமரங்கள் உள்ளது. சுமார் ஆயிரத்து 223 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய மலைகள் சிறு குன்றுகள், வனப்பகுதிகள் உள்ளன.

    இந்த வனப்பகுதியில் ஏராளமான சந்தன மரங்கள் இருப்பதை அறிந்த சந்தன மர கடத்தல் கும்பல் சந்தன மரங்களை வெட்டி கடத்தும் திட்டத்துடன் மலைப்பகுதியில் முகாமிட்டு தங்கியிருந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேரை பிடித்தனர் மீதம் உள்ள நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்த மூர்த்தி (வயது28) மல்லப்பா(58) கிருஷ்ணா(28) ஆகியோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய நபர்களை கர்நாடக போலீசார் தேடி வருகிறார்கள்.

    கர்நாடக போலீசார் நடத்திய விசாரணையில் சந்தன மரம் வெட்டி கடத்தும் கும்பலில் சுமார் 12 முதல் 15 பேர், மலைப்பகுதியில் தங்கி அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு கொண்டு சந்தனக் கட்டைகளை சிறிது சிறிதாக வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகியோரிடம் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டியல் நத்தம் இருளர் காலனியை சேர்ந்த 5 பேரை சம்பந்தப்பட்டு உள்ளது தெரிய வந்தது. அவர்களை கர்நாடக போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ள 15 பேர் கொண்ட கும்பலில் மேலும் பர்கூர் பகுதியை சேர்ந்தவர்களும் கடத்தலில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

    இந்த நிலையில் வேப்பனப்பள்ளிக்கு கைதான மூர்த்தி, மல்லப்பா, கிருஷ்ணா ஆகிய 3 பேரையும் கர்நாடக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு உண்டியல் நத்தம் இருளர் காலனிக்கு அழைத்து சென்று, அவர்களது கூட்டாளிகள் இருக்கிறார்களா? என்று கர்நாடக போலீசார் சோதனை செய்தனர்.

    சந்தன மரம் கடத்தல் வழக்கில் தருமபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 3 வாலிபர்களை கர்நாடக மாநில போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×