என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மு.க.ஸ்டாலினுக்கு தபாலில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து- பா.ஜ.க.வினருக்கு உத்தரவிட்ட அண்ணாமலை
Byமாலை மலர்7 Sep 2021 3:45 AM GMT (Updated: 7 Sep 2021 8:09 AM GMT)
பா.ஜ.க. அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் முதல்-அமைச்சருக்கு ஒரு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விநாயகரை வழிபட தடை விதிப்பது தனிமனித அத்துமீறல் இல்லையா?
தமிழக மக்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள், மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை நாம் அனைவரும் ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பா.ஜ.க. அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொடர்ந்து பக்தர்களின் மனதையும், மதத்தையும் புண்படுத்தி வரும் தி.மு.க. ஆட்சியில், விநாயகர் சிலைகள் வைக்க தடை விதித்தும், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் ஏழை குயவர்களை கைது செய்தும், குறிப்பாக இந்துக்கள் மத்தியில் ஒரு அச்சத்தையும் படபடப்பையும் ஏற்படுத்தி வரும் அரசின் இந்த அராஜக நடவடிக்கைகளை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
புதுச்சேரி, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்பட அண்டை மாநிலங்களில் எல்லாம் விநாயகர் வழிபாட்டுக்கு எந்த தடையும் இல்லாதபோது, தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கூட விதிக்காமல், முழுமையான தடை விதிக்க காரணம் என்ன?
தமிழக மக்களுக்கும், பா.ஜ.க. தொண்டர்களுக்கும் பணிவான வேண்டுகோள், மாற்றுமத பண்டிகைகளுக்கு மனமார வாழ்த்து சொல்லும் நம் மாநில முதல்-அமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை நாம் அனைவரும் ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பி வைப்போம். பா.ஜ.க. அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் தமிழக முதல்-அமைச்சருக்கு ஒரு தபால் அட்டையில் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...நித்யானந்தாவின் பெண் சீடர்கள் விரட்டியடிப்பு: பொதுமக்கள் ஆத்திரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X