என் மலர்
செய்திகள்

கோபிசெட்டிபாளையம் சிறையில் 2 கைதிகளுக்கு கொரோனா
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் மாவட்ட சிறை சாலை உள்ளது. இங்கு ஈரோடு மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறையில் இருந்த கைதிகள் பாலயோகி, ரஞ்சித்குமார் ஆகிய 2 பேர் கடந்த சில நாட்களாக உடல் நிலைபாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர்கள் தங்கிருந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சிறைக்குள் இருந்த 2 கைதிகளுக்கு கொரோனா தொற்று எப்படி? ஏற்பட்டது என்று சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






