என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாய்மேடு அருகே ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்6 Sep 2021 7:00 AM GMT (Updated: 6 Sep 2021 7:00 AM GMT)
வாய்மேடு அருகே ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடப்பட்டது.
வாய்மேடு:
நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி முழுவதும் தடுப்பூசி போடாத அனைவருக்கும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.
இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, மருத்துவர் சிவரஞ்சனி, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X