search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வாய்மேடு அருகே ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    வாய்மேடு அருகே ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடப்பட்டது.
    வாய்மேடு:

    நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து 20 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதியில் தகரம் மூலம் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ஊராட்சி முழுவதும் தடுப்பூசி போடாத அனைவருக்கும் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

    இதையடுத்து சுகாதாரத்துறை சார்பில் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் கொரோனா பரிசோதனை முகாம் நடந்தது. இந்த முகாமை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், வட்டாட்சியர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுருபாண்டியன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரராஜன், வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கன்னிகா, மருத்துவர் சிவரஞ்சனி, சுகாதார ஆய்வாளர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×