என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பற்றி நடத்திய பாடம்- டுவிட்டரில் பதிவிட்டு ஆசிரியை பெருமிதம்
Byமாலை மலர்4 Sep 2021 5:22 AM GMT (Updated: 4 Sep 2021 5:22 AM GMT)
சீனாவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கீழடி பற்றி பாடம் நடத்தப்பட்டுள்ளது. அது சம்பந்தமான காட்சியை அங்குள்ள ஆசிரியை தனது டுவிட்டரில் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 4, 5, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.
தற்போது 2021-ம் ஆண்டுக்கான 7-ம் கட்ட அகழாய்வு மாநில தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் 6, 7-ம் கட்ட அகழாய்வுகள் கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
ஆசிரியை நிறைமதி கிகி ஜாங், சீனராக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். அதனால்தான் தனது பெயரை நிறைமதி என மாற்றி இருக்கிறார். தமிழகத்துக்கு இவர் ஏற்கனவே வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அதன்பின்பு தமிழ் கற்க தொடங்கினார். சீன வானொலியில் தமிழ் பிரிவிலும் பணியாற்றியவர். அதன்பின்புதான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகி, தமிழ் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியன் கீழடியில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 2017-ம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் 3 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி நடைபெற்றது. 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் 4, 5, 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்றன.
தற்போது 2021-ம் ஆண்டுக்கான 7-ம் கட்ட அகழாய்வு மாநில தொல்லியல் துறையின் சார்பில் நடைபெற்று வருகிறது. இதில் 6, 7-ம் கட்ட அகழாய்வுகள் கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
கீழடி அகழ்வாராய்ச்சி தமிழர்களின் பெருமை, வரலாற்றை உலகறிய செய்துள்ளது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் சீனாவில் உள்ள பல்கலைக்கழகமான “யுனான் மின்சூவில்” தமிழ் துறை மாணவர்களுக்கு கீழடி அகழாய்வு, தமிழர் பாரம்பரியம், வாழ்வியல் முறை பற்றி ஆசிரியை “நிறைமதி கிகி ஜாங்” பாடம் நடத்தியுள்ளார். அந்த காட்சியை தனது டுவிட்டரிலும் பதிவிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆசிரியை நிறைமதி கிகி ஜாங், சீனராக இருந்தாலும் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். அதனால்தான் தனது பெயரை நிறைமதி என மாற்றி இருக்கிறார். தமிழகத்துக்கு இவர் ஏற்கனவே வந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அதன்பின்பு தமிழ் கற்க தொடங்கினார். சீன வானொலியில் தமிழ் பிரிவிலும் பணியாற்றியவர். அதன்பின்புதான் பல்கலைக்கழகத்தில் ஆசிரியையாகி, தமிழ் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X