என் மலர்
செய்திகள்

தற்கொலை
பர்கூர் அருகே பெண் தற்கொலை
பர்கூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:
பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியை சேர்ந்தவர் காமாட்சி (வயது 40), கூலித் தொழிலாளி. இவர் கணவரை பிரிந்து கடந்த 17 ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷத்தை குடித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைபலன் அளிக்காமல் காமாட்சி நேற்று முன்தினம் இறந்தார். இது குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






