என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை
Byமாலை மலர்1 Sep 2021 12:19 PM GMT (Updated: 1 Sep 2021 12:19 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே குழந்தையை கடத்த முயன்ற 2 பெண்களுக்கு, தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டு தீர்ப்புஅளித்தது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி லைன் கொல்லை பகுதியை சேர்ந்தவர் சத்தியராஜ் (வயது 33). கூலித்தொழிலாளி. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந் தேதி சத்தியராஜின் வீட்டிற்கு வந்து பர்கூர் அடுத்த சக்கில் புதூர் பகுதியை சேர்ந்த அலமேலு (25) மற்றும் சீதா (30) ஆகியோர் தங்கள் பகுதியில் கட்டப்படும் கோவில் திருப்பணிக்கு உதவுமாறு கூறினார்கள்.
அதற்கு சத்தியராஜின் மனைவி மறுப்பு தெரிவித்து வீட்டிற்குள் சென்ற நேரத்தில் வெளியில் விளையாடிய அவரது 2 வயது குழந்தையை கடத்தி செல்ல முயன்றனர். குழந்தையின் அழுகுரல் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த பெண்கள் 2 பேரையும் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார்.
அதன்படி குழந்தையை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அலமேலு, சீதா ஆகிய 2 பேருக்கும் தலா, 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 500 ரூபாய் அபராதமும், இதை கட்டத் தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல்பாஸ்கர் ஆஜராகிவாதாடினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X