search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை கைது

    பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் சோர்வுடன் காணப்பட்டார்.

    இதுகுறித்து அவரது தாய் மாணவியிடம் விசாரித்தபோது, கடந்த ஆண்டு முதல் தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும் கூறி அழுதார். இதைக்கேட்டு மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து மாணவியின் தாய் விருதுநகர் நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பெற்ற மகளையே இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி (வயது42) என்பவரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×