search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பெரம்பலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    பெரம்பலூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சின்னசாமி(வயது 62). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி நைனாம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சின்னசாமி வயலுக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் சின்னசாமியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சின்னசாமி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×