search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழையால் நெற்பயிர்கள் சேதம்
    X
    மழையால் நெற்பயிர்கள் சேதம்

    பாகூர் பகுதியில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சேதம்

    பாகூர் பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பாகூர்:

    புதுவையின் நெற்களஞ்சியமாக பாகூர் விளங்குகிறது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் புதுவை, பாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×