என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகூர் பகுதியில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சேதம்
Byமாலை மலர்30 Aug 2021 3:30 AM GMT (Updated: 30 Aug 2021 3:30 AM GMT)
பாகூர் பகுதியில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாகூர்:
புதுவையின் நெற்களஞ்சியமாக பாகூர் விளங்குகிறது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுவை, பாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுவையின் நெற்களஞ்சியமாக பாகூர் விளங்குகிறது. பாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அவை நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. ஒரு சில பகுதிகளில் அறுவடை பணிகளும் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் புதுவை, பாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நெற்பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் அறுவடை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். எனவே சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X