என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையம் அருகே வெடிகுண்டுகளுடன் 2 பேர் கைது
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜ புரம், கணபதி சுந்தர நாச்சியார் புரம் கிராம மலையடிவார பகுதியில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டுகளை பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடுவதாக புகார்கள் உள்ளன.
இதனை தடுக்க வனத் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சக்தி பிரசாத், கதிர்காமன், வனவர் குருசாமி மற்றும் வனக்காப்பாளர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள புல்லு பத்தி பீட் தொட்டி அம்மன் கோவில் அருகே ரோந்து சென்றபோது 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் இருவர் வனத்துறையினரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர். மற்ற 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் பிடிபட்டனர்.
விசாரணையில் அவர்களது பெயர் ராம் அழகு (வயது 43), பிள்ளையார் (31) என்பதும், கணபதி சுந்தர நாச்சியார்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 10 நாட்டு வெடிகுண்டுகள், 9 கிலோ காட்டுப் பன்றி இறைச்சி, ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு அரிவாள் போன்றவை கைப்பற்றப்பட்டன. தப்பி ஓடிய சுந்தரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆசைக்கனி(28), காளிராஜ் (25) ஆகியோரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்