என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சீர்காழியில் இன்று காலை முதியவரை காப்பாற்ற முயன்ற என்ஜினீயர் பலி
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திட்டை ரோடு சர்ச் பகுதி வழியாக இன்று காலை லாரி ஒன்று சென்றுள்ளது. அப்போது சாலையின் ஓரம் இருந்த மின்பம்பத்தில் லாரி உரசியதில் மேலேசென்ற மின்சார வயர் அறுந்து தொங்கி கொண்டிருந்தது. இந்நிலையில் அந்த சாலையின் வழியே சென்ற தில்லைவிடங்கன் கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் (வயது65) என்பவர் மீது அறுந்து கிடடந்த மின் ஒயர் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைப்பார்த்த அங்கு நின்று கொண்டிருந்த குளங்கரை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் அரவிந்தன் (25) என்பவர் முதியவர் மயங்கி கீழே விழுவதாக நினைத்து உடனடியாக ஓடி சென்று அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியதில் அரவிந்தனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மின்வாரிய ஊழியர்கள் உதவியுடன் மின்சாரத்தை துண்டித்தனர். பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்