என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    வெள்ளோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    சென்னிமலை:

    வெள்ளோடு அருகே உள்ள கொத்துமுட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (52). விவசாயி. இவரது மனைவி கலைச்செல்வி (44). இந்நிலையில் சம்பத்தன்று முருகேசன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று விட்டனர்.

    பின்னர் மாலையில் இருவரும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும், பீரோவை திறந்து அதில் இருந்து 7½ பவுன் தங்க தாலி, 2 பவுன் தங்கச்சங்கிலி, 3 செட் வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இதனையடுத்து முருகேசன் வெள்ளோடு போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×