search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேலூர், காட்பாடியில் இன்று நடக்க இருந்த பள்ளி மாணவிகள் 2 பேர் திருமணம் தடுத்து நிறுத்தம்

    காட்பாடியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு இன்று நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    வேலூர்:

    காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த (வயது 14) சிறுமிக்கும் காங்கேயநல்லூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து அவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை காங்கேயநல்லூரில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

    இந்த நிலையில் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு குழந்தை திருமணம் நடப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் சிறுமி வீட்டுக்கும், வாலிபர் வீட்டுக்கும் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு 14 வயது ஆவதும் 10-ம் வகுப்பு படித்து வருவதும் தெரிய வந்தது.

    அதைத்தொடர்ந்து இருவருக்கும் இன்று நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. மேலும் சிறுமியையும் வாலிபரையும் அவர்கள் வேலூரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல வேலூர் சலவன்பேட்டை பகுதியில் 9-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் 35 வயது வாலிபருக்கும் இன்று காலை திருமணம் நடக்க இருந்தது.

    சமூகநலத்துறை அதிகாரிகள் நேற்று இரவு மாணவியின் வீட்டிற்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    இது தொடர்பாக மாணவியின் பெற்றோரிடம் சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×