search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

    வேதாரண்யம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த புதுப்பள்ளி பகுதியில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுப்பள்ளி சக்கிலியன் ஆற்று இரண்டாவது பாலத்தின் அடியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டு இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் புதுபள்ளியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 23), சிவசந்தன் (25) என்பதும், சிறு சிறு பொட்டலங்களாக பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமார், சிவசந்தன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×