என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கீழப்பழுவூர் அருகே லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் பலி

    கீழப்பழுவூர் அருகே லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கீழப்பழுவூர்:

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரைப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தங்கவேலின் மகன் மணிகண்டன்(வயது 30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இவர், வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க தனது மோட்டார் சைக்கிளில் கீழப்பழுவூர் நோக்கி சென்றார். திருமானூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு கல்லூரி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கிழே விழுந்த மணிகண்டன் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில் தலை நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×