என் மலர்
செய்திகள்

முகக்கவசம்
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.37 ஆயிரம் அபராதம் வசூல்
நீலகிரி மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த 9.475 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக ஒரே நாளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த நபர்களிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த 9.475 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தடுப்பதோடு, கொரோனாவை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்கள் அடங்கிய 4 மண்டலங்களில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிப்பதற்காக ஒரே நாளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தாசில்தார்கள், துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் குழுக்களாக பிரிந்து மாவட்டம் முழுவதும் சோதனை செய்தனர். அப்போது கொரோனா தொற்றை பரப்பும் வகையில் முகக்கவசம் அணியாமல் இருந்த நபர்களிடம் இருந்து ரூ.37 ஆயிரத்து 200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.
கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்த 9.475 கிலோ கிராம் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.21 ஆயிரத்து 150 அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக்கை தடுப்பதோடு, கொரோனாவை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story






