என் மலர்
செய்திகள்

தற்கொலை
ஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை
ஊத்தங்கரை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
ஊத்தங்கரை அருகே உள்ள மல்லிப்பட்டி சாமியார் நகரை சேர்ந்தவர் நந்தீஸ்வரன் என்கிற விஜய். இவருடைய மனைவி அலமேலு (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்து வந்த அலமேலு அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் அலமேலு தற்கொலை குறித்து ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






