search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூர் அருகே பைக் திருடிய 3 பேர் கைது

    வேலூர் அருகே பைக் திருடியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த பொய்கை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 44), தொழிலாளி.
     
    இவர் வீட்டின் முன்பு பைக்கை நிறுத்தி விட்டு நேற்று முன்தினம் இரவு தூங்க சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது. இதேபோன்று வேலூரை அடுத்த சத்தியமங்கலத்தை சேர்ந்த குணசேகரன் வீட்டின் அருகே நிறுத்தியிருந்த பைக் திருடு போயிருந்தது.

    இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசில் விஜயகுமார், குணசேகரன் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சென்னை-பெங்களூரு சாலை அப்துல்லாபுரம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக 2 பைக்கில்  வந்த 3 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் (34), பாபுசேட்டு (26), கஸ்பா மோகன் (21) என்பதும்  அவர்கள் ஓட்டி வந்த பைக் விஜயகுமார், குணசேகரனின் திருட்டு போன மோட்டார் சைக்கிள்கள் என்று தெரிய வந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.  மேலும் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
    Next Story
    ×