என் மலர்
செய்திகள்

தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயி உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கல்லாவி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அருகே உள்ள நாயக்கனூர் புதூரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 29). விவசாயி. இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் பிரிந்து வாழ்ந்த அவர்களுக்குள் கடந்த 15 நாட்களுக்கு முன்பு விவகாரத்து ஆனது.
இதனால் மனமுடைந்த பிரகாஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆந்தர மாநிலம் இட்சப்புரா அருகே உள்ள அரக்கபத்ரா கிராமத்தை சேர்ந்தவர் குஜிவேல் (22). இவர் ஓசூர் அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கந்திகுப்பம் அருகே உள்ள செந்தாரப்பள்ளியை சேர்ந்தவர் முரளி (34). லாரி டிரைவர். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதுதொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறு காரணமாக முரளி விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் முரளி இறந்தார். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






