என் மலர்
செய்திகள்

பஸ் நிலையம் பகுதியில் அடைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுக்கடை
ஈரோட்டில் கொரோனா கட்டுப்பாடு- பொதுமக்கள் அதிகம் கூடும் 24 இடங்களில் கடைகள் அடைப்பு
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு, கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து டீ கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும்,
பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபிசெட்டிபாளையத்தில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்திய மங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இதுபோக ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரேனா கட்டுப்பாடு காரணமாக இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
மாநகராட்சி அலுவலர்கள் அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா என்று கண்காணித்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்பட்டு வந்த 12 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.
இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் உள்ளிட்ட மற்ற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் அனைத்திலும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சலில் மட்டுமே உணவு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அனைத்து டீ கடைகளுக்கும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக காணப்படும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகளிலும்,
பவானியில் காவிரி ரோடு, கூடுதுறை, அம்மாபேட்டை டவுன், மங்களபடி துறை ஆகிய பகுதிகளிலும், கோபிசெட்டிபாளையத்தில் மார்க்கெட், கடைவீதி பகுதிகளிலும், சத்திய மங்கலத்தில் வரதம்பாளையம், நிர்மலா தியேட்டர் ஜங்ஷன், புளியம்பட்டி மாதம்பாளையம் சந்திப்பு, புளியம்பட்டி பஸ் நிலையம் எதிரில், தாளவாடி பஸ்ரேஸ்வரா பஸ் நிலையம், டி.என். பாளையம் பஸ் நிறுத்தம் அருகில், டி.ஜி.புதூர் ஆகிய பகுதிகளிலும் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் 24 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் சாலையின் இருபுறங்களிலும் 100-க்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இதுபோக ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், அழகு சாதன கடைகள் போன்ற கடைகள் இருப்பதால் இங்கு மக்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது கொரேனா கட்டுப்பாடு காரணமாக இன்று கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டிருந்தது. இந்த பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் மட்டுமே இன்று திறக்கப்பட்டு இருந்தது.
மாநகராட்சி அலுவலர்கள் அனுமதி மறுக்கப்பட்ட வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா என்று கண்காணித்தனர். மாநகர் பகுதியில் மட்டும் 11 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடைகள் அடைக்கப்பட்டுள்ள பகுதியில் செயல்பட்டு வந்த 12 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
Next Story






