என் மலர்
செய்திகள்

தற்கொலை
தேவர்சோலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை
தேவர்சோலை அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 72). இவர் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு, தேவர்சோலை அருகே மச்சிக்கொல்லி பேபி நகர் பகுதியில் குடும்பத்தினருடன் குடியேறினார். இந்த நிலையில் பாலகிருஷ்ணனுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாலகிருஷ்ணன், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்சோலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாமணி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






