என் மலர்
செய்திகள்

கர்நாடகாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது
கர்நாடகாவில் இருந்து வந்த 310 பேருக்கு கொரோனா பரிசோதனை
முகாமில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு நேரக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்க ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் சமர்க்கப்பிக்க வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறக்கப்பட்டது.
இதன்படி தமிழகம்- கர்நாடக எல்லையாக பாரதிபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரானா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் வரும் அரசு பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் அரசு வகுத்துள்ள கொரோனா நெறிமுறைகளின்படி தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த இரண்டு சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பஸ் பயணிகள், சுற்றுலா வேன்கள் ஓட்டுநர்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
முகாமில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கர்நாடத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காலையில் அதிகளவில் கர்நாடகாவில் இருந்து வந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல கர்நாடகாவில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து, இன்று 2-வது நாளாக பாரதி புரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரானா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மாவட்டத்தில் வணிக நிறுவனங்களுக்கு நேரக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கர்நாடகத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் இரண்டு தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்க ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் சமர்க்கப்பிக்க வேண்டும் என் மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறக்கப்பட்டது.
இதன்படி தமிழகம்- கர்நாடக எல்லையாக பாரதிபுரத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரானா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் வரும் அரசு பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டு அதில் இருந்த பயணிகள் அரசு வகுத்துள்ள கொரோனா நெறிமுறைகளின்படி தடுப்பூசி சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது. இந்த இரண்டு சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
பஸ் பயணிகள், சுற்றுலா வேன்கள் ஓட்டுநர்கள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
முகாமில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் கர்நாடத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்திற்கு வந்த 310 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
காலையில் அதிகளவில் கர்நாடகாவில் இருந்து வந்தனர். ஆனால் நேரம் செல்ல செல்ல கர்நாடகாவில் இருந்து வருபவர்கள் எண்ணிக்கை குறைந்து, இன்று 2-வது நாளாக பாரதி புரத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Next Story






