என் மலர்
செய்திகள்

மரணம்
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லல்:
ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஏ.ஆர்.மங்கலத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் (வயது 55). இவர் தேவகோட்டை அருகே முள்ளிக்குண்டுவை சேர்ந்த மைக்கேல் திரவியம் என்பவரிடம் விறகு வெட்டும் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று இவர் அந்த பகுதியில் விறகு வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு விசாலம் கோட்டை அருகே வரும்போது லாரிக்கு இடையூறாக இருந்த மின் வயரை கம்பால் தூக்கியபோது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டார். தேவகோட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






