என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வரதட்சணை கொடுமை: பெண்ணை தூக்கில் தொங்கவிட்டு கணவர்-மாமியார் தப்பி ஓட்டம்
ஆலங்குடி:
தஞ்சாவூர் மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள இடையாத்தி பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா மகன் அய்யப்பன். இவருக்கும் கவுசல்யாவுக்கும் கடந்த 5½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 4½ வருடங்களாக கணவனும், மாமியாரும் சேர்ந்து கவுசல்யாவை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கவுசல்யா கந்தர்வகோட்டை அருகே மட்டங்காள் பகுதியில் உள்ள தனது தந்தை ரவி வீட்டிற்கு சென்றார்.
கடந்த ஆடிப்பெருக்கு அன்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்து வந்த கணவர் அய்யப்பன் மீண்டும் வரதட்சணை வாங்கி வருமாறு கூறி துன்புறுத்தி உள்ளார். இதற்கு அய்யப்பனின் தாய் சரோஜாவும் உடந்தையாக இருந்துள்ளார்.
நேற்று மதியம் 12 மணி அளவில் வீட்டில் உள்ள உத்திரத்தில் கவுசல்யாவை தூக்கில் தொங்க விட்டதோடு கதவை பூட்டி விட்டு இருவரும் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
அக்கம்பக்கத்தினர் கவுசல்யா தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக வாண்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனாலும் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வராததால் ஆத்திரம் அடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கறம்பக்குடி- பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்.டி.ஒ. இரவு 9 மணி அளவில் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து கவுசல்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக இரவு 9.30 மணியளவில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். வாண்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்