என் மலர்
செய்திகள்

கைது
தூசி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
தூசி அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
தூசி:
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 62), வையாபுரி (60), மணி (50), மனோகரன் (40), முனியாண்டி ஆகியோர் 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.
தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்களில் மணி, முனியாண்டி, மனோகரன் ஆகிய 3 பேர் போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து ஹரிதாஸ், வையாபுரி ஆகியோரை போலீசார் கைது செய்து. 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 62), வையாபுரி (60), மணி (50), மனோகரன் (40), முனியாண்டி ஆகியோர் 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.
தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்களில் மணி, முனியாண்டி, மனோகரன் ஆகிய 3 பேர் போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடினர்.
இதனையடுத்து ஹரிதாஸ், வையாபுரி ஆகியோரை போலீசார் கைது செய்து. 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
Next Story






