என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தூசி அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

    தூசி அருகே மணல் கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே கீழ்நேத்தப்பாக்கம் ஆற்றுப்படுகையில் இருந்து அதே கிராமத்தை சேர்ந்த ஹரிதாஸ் (வயது 62), வையாபுரி (60), மணி (50), மனோகரன் (40), முனியாண்டி ஆகியோர் 5 மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர்.

    தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தவர்களில் மணி, முனியாண்டி, மனோகரன் ஆகிய 3 பேர் போலீசாரை பார்த்தவுடன் மாட்டு வண்டிகளை விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    இதனையடுத்து ஹரிதாஸ், வையாபுரி ஆகியோரை போலீசார் கைது செய்து. 5 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.


    Next Story
    ×