search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ராணிப்பேட்டையில் பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு

    மினி பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிப்காட் (ராணிப்பேட்டை):

    ராணிப்பேட்டையில் உள்ள முக்கியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 66). இவர், ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே எம்.பி.டி. சாலையில் நடந்து சென்றார்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் திடீரென லலிதா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலிதா சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லலிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×