search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    வேலூர் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,593 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனார். 24 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 48,035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 46,593 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,095 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தற்போது சுமார் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. எனவே பொதுமக்கள் அருகில் உள்ள பகுதியில் நடக்கும் சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×