search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    கறம்பக்குடி அருகே விடுதியில் சிலிண்டர்கள் திருட்டு

    கறம்பக்குடி அருகே விடுதியில் சிலிண்டர்கள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்குடி:

    கறம்பக்குடி அருகே மழையூர் அரியாண்டி கிராமத்தில் அரசு ஆதி திராவிடர் மாணவர் விடுதி உள்ளது. இங்கு ரமணி என்பவர் விடுதி காப்பாளராக (வார்டன்) பணியாற்றி வருகிறார். பள்ளிகள் செயல்படாததால் மாணவர் விடுதி மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்கு ஊழியர்கள் விடுதியை திறந்தனர். அப்போது சமையலறையில் இருந்த ஆறு கேஸ் சிலிண்டர்களை காணவில்லை.

    இதுகுறித்து மாணவர் விடுதி வார்டன் ரமணி மழையூர் போலீசில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×