search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. மாவட்ட செயலாளா் ஆா்.டி.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    அ.தி.மு.க. மாவட்ட செயலாளா் ஆா்.டி.ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க.அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து பெரம்பலூரில் அ.தி.மு.க. வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கணக்கீடு உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க.ஆட்சிக்கு வந்தது. ஆனால், இதில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    அதன்படி பெரம்பலூர் மாவட்டம் நகர அ.தி.மு.க. சார்பில், மேற்கு வானொலி திடலில் உள்ள கட்சி அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    பெரம்பலூர் மாவட்ட மாணவரணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழ்ச்செல்வன் தனது வீட்டின் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். முன்னாள் எம்.பி.யும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளருமான மருதராஜா தலைமையில் அ.தி.மு.க.வினர் பெரம்பலூர் மாவட்ட சாரணர் பயிற்சி மையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் பூவை.செழியன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் செல்வகுமார் தலைமையில் கவுல்பாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் நகரத்தில் கிளை வார்டுகளிலும், குரும்பலூர் பேரூராட்சியிலும், ஊராட்சி, கிராமப்புற பகுதிகளிலும் தி.மு.க. வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    பெருமத்தூரில், வேப்பூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் கட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி, ஒன்றிய இணைச் செயலாளர் அமுதா கொளஞ்சிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆலத்தூர் தாலுகா, கொளக்காநத்தம் பகுதியில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.கே. கர்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அடைக்கம்பட்டி கிராமத்தில் மேற்கு ஒன்றிய செயலாளர் சசிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வேப்பூர் ஒன்றியம், புதுவேட்டக்குடியில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    Next Story
    ×