என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே தீ விபத்தில் பெண் உயிரிழப்பு
Byமாலை மலர்27 July 2021 10:28 AM GMT (Updated: 27 July 2021 10:28 AM GMT)
குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.
ஆரணி:
ஆரணியை அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரின் மனைவி சரிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் சஞ்சய் என்ற மகனும், 3 வயதில் தாரணிகா என்ற மகளும் உள்ளனர். 21-ந்தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அப்போது குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.
அன்று மாலை சரிதா வீட்டுக்குள் நுழைந்ததும் டீ, போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். குபீரேன தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. சரிதா சேலையிலும் தீப்பிடித்து எரிந்தது, அவர் கூச்சலிட்டு அலறினார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணியை அடுத்த ஒண்டிகுடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரின் மனைவி சரிதா (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் சஞ்சய் என்ற மகனும், 3 வயதில் தாரணிகா என்ற மகளும் உள்ளனர். 21-ந்தேதி வீட்டில் குழந்தைகள் விளையாடி கொண்டிருந்தன. அப்போது குழந்தைகள் விளையாட்டாக கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டதாக தெரிகிறது.
அன்று மாலை சரிதா வீட்டுக்குள் நுழைந்ததும் டீ, போடுவதற்காக தீக்குச்சியை உரசினார். குபீரேன தீப்பிடித்து அறை முழுவதும் பரவியது. சரிதா சேலையிலும் தீப்பிடித்து எரிந்தது, அவர் கூச்சலிட்டு அலறினார்.
அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரிதா பரிதாபமாக உயிரிழந்தார். ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X