search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காவேரிப்பட்டணம் அருகே விபத்து: போலீசை தாக்கிய 4 பேர் கைது

    போலீசாரால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சிலர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காவேரிப்பட்டணம்:

    காவேரிப்பட்டணம் அருகே பையூர் பக்கமுள்ள ஆத்தோரன் கொட்டாய் வழியாக நேற்று முன்தினம் இரவு கல்பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை ரோந்து பணியில் இருந்த போலீசார் நிறுத்தினார்கள். அப்போது பின்னால் வந்த டாரஸ் லாரி முன்னால் நின்ற லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. போலீசாரால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறி சிலர் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ்காரர் சரவணனை சிலர் தாக்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து போலீசார் எச்சரித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். இதுதொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆத்தோரன்கொட்டாய் குட்டி என்கிற சுப்பிரமணி (40), சிபி சக்கரவர்த்தி (28), சக்திவேல் (30), செல்வம் (30) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலம் சிலரை தேடி வருகிறார்கள். இந்த சாலை மறியலால் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×