search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

    துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருந்த மொபட் உள்ளிட்ட 9 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூரை அடுத்த ஓட்டேரி கூட்ரோட்டில் பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், செல்வராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர் வேலூரை அடுத்த அத்தியூரை சேர்ந்த சங்கர் மகன் கோபாலகிருஷ்ணன் (வயது 19) என்று தெரிய வந்தது. மேலும் அவர் முரண்பாடான தகவல்களை தெரிவித்தார். அதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டனர். அதில், கோபாலகிருஷ்ணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மோகன் (21) ஆகியோர் வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 9 மோட்டார் சைக்கிள்களை திருடி அவற்றை துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் துத்திப்பட்டில் பதுக்கி வைத்திருந்த மொபட் உள்ளிட்ட 9 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×