என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை
Byமாலை மலர்19 July 2021 11:13 AM GMT (Updated: 19 July 2021 11:13 AM GMT)
வெவ்வேறு சம்பவங்களில் பெண்கள் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி மணிமேகலை (வயது 50). இவருக்கு வயிற்று வலி இருந்ததாகவும், அதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, வயிற்று வலி தாங்க முடியாமல் மணிமேகலை சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த மணிமேகலைக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இதேபோல் பெரம்பலூர் அருகே உள்ள எசனை கல்ஒட்டர் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). கொத்தனாரான இவருக்கு சர்க்கரை வியாதி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த செந்தில்குமார் சம்பவத்தன்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததில் மயங்கி கிடந்தார். இதனை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில்குமார் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த செந்தில்குமாருக்கு நதியா என்ற மனைவியும், தனுஷ் (11), ஹரிஷ் (7) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கல் ஒட்டர் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். இவரது மனைவி மூக்காயி(56). இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மூக்காயி சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி கிடந்தார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவருடைய மகன் முருகேசன், மூக்காயியை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூக்காயி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X