என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்18 July 2021 11:37 AM GMT (Updated: 18 July 2021 11:37 AM GMT)
ஆலங்குடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள வம்பன் காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முத்துக்குமார் (வயது 26). இவர், ஆலங்குடியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்து முத்துக்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வம்பன் காலனியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். கோவிலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, முன்னால் ஒரு நாய் வந்ததால் திடீரென பிரேக் போட்டு மோட்டர் சைக்கிளை நிறுத்தியுள்ளார். அப்போது, ஆலங்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், முத்துக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். தகவல் அறிந்து ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்தை ஏற்படுத்திய காரை ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் விபத்தில் இறந்த முத்துக்குமார் மனைவி பாண்டி மீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X