search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நாகூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

    நாகூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகூர்:

    நாகூரை அடுத்த தெத்தி காலேஜ் புதுரோடு பகுதியை சேர்ந்த முகமது ஆரிப் மகன் தமிம் அன்சாரி (வயது 24). கூலி தொழிலாளி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு அவர் மருந்து, மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது வயிற்று வலி அதிகமானதால் தமிம் அன்சாரி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிம் அன்சாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×