search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    கலசபாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி

    கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த எம்.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 42), விவசாயி. இவர் நேற்று முன்தினம் திருவண்ணாமலையில் இருந்து எம்.என்.பாளையத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வேலூரில் இருந்து திருவண்ணாமலையை நோக்கி வந்த ஒரு கார் திடீரென அவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதில் தூக்கி வீசப்பட்ட தேவேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×