search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    சிவகாசி அருகே டீக்கடையை உடைத்து பணம் திருட்டு

    சிவகாசி அருகே டீக்கடையை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி கட்டளைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 37) என்பவர் இரட்டைபாலம்-கல்மண்டபம் ரோட்டில் தகர செட் அமைத்து அதில் டீக்கடை நடத்தி வந்தார். இரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த பணம், சிகரெட், பிஸ்கட் மற்றும் பொருட்கள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் சாமி இதுகுறித்து சிவகாசி டவுன் குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×