search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காவேரிப்பாக்கம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது

    காவேரிப்பாக்கம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் கவரத்தெருவைச் சேர்ந்தவர் திவாகர் (வயது 22). இவர், கடந்த 13-ம்தேதி ஆற்காடு அடுத்த எசையனூர் கிராமத்துக்கு நண்பரை பார்க்க பாலாறு வழியாக சென்றார். பாலாற்றில் இருந்த வாலிபர் ஒருவர் திவாகரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.

    இதுகுறித்து திவாகர் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் நேற்று காவேரிப்பாக்கம் அத்திப்பட்டு இ.பி. அலுவலகம் அருகே தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிளை போலீசார் மடக்கி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். பனப்பாக்கம் திருமால்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்த கண்ணன் (22) என்றும், திவாகரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார், கண்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன், ரூ.500-யை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×