search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    விராலிமலை அருகே லாரி மோதி பெண் பலி

    விராலிமலை அருகே லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விராலிமலை:

    திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, அண்ணாபண்ணையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி லட்சுமி (வயது 48). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விராலிமலை அருகே தேத்தாம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை அண்ணாபண்ணைக்கு செல்வதற்காக தேத்தாம்பட்டி அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக லட்சுமி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×