search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திட்டச்சேரி அருகே உள்ள கொந்தகை கடைத்தெருவில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.
    X
    திட்டச்சேரி அருகே உள்ள கொந்தகை கடைத்தெருவில் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய காட்சி.

    நாகையில் பலத்த மழை: விவசாயிகள் மகிழ்ச்சி - சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது

    நாகையில் பெய்த பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    சிக்கல்:

    நாகையில் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இதனால் மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்தநிைலயில் நேற்று மாலை முதல் திடீரென மழை பெய்தது. மாலை கருமேகங்கள் சூழ்ந்து இருட்டத் தொடங்கியது. பின்னர் 6.30 மணியளவில் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. அப்போது மின்சாரம் தடைபட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நாகை பகுதிகளில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாகையில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இதைப்போல கீழ்வேளூர் மற்றும் அதன்சுற்று வட்டார பகுதி மக்களும் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெயிலில் சிக்கி அவதிப்பட்டனர். இந்தநிலையில்நேற்று மாலை பெய்த பலத்த மழை நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கல், பொரவச்சேரி, ஆழியூர், அகரகடம்பனூர், மற்றும் கீழ்வேளூர், கோகூர், வடகரை, ஆணைமங்கலம், ஓர்குடி, ஒக்கூர், தேவூர், பட்டமங்கலம், இலுப்பூர், வடக்காலத்தூர், இருக்கை, வெண்மணி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மேலவாஞ்சூர், முட்டம், மேல நாகூர், தெத்தி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருமருகல் ஒன்றிய பகுதிகளில் திருமருகல், திட்டச்சேரி, திருக்கண்ணபுரம், போலகம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிர் செய்துள்ள குறுவை நெற்பயிருக்கு போதுமான அளவு நீர் கிடைத்துள்ளதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த காற்றால் மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி கொண்டதால் மின்சாரம் 1 மணி நேரத்திற்கு மேல் தடைபட்டது.

    Next Story
    ×